இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,514 பேருக்கு கொரோனா பாதிப்பு ....ஒரே நாளில் 251 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 12,514 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,514 பேருக்கு கொரோனா பாதிப்பு ....ஒரே நாளில் 251 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் மத்திய அரசின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,514 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 3,42,85,814 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,718 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,36,68,560 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 251 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,58,186 லிருந்து 4,58,437 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98. 20 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.34 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 12,77,542 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 1,06,31,24,205 டோஸ்கள் இந்தியாவில் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் உருமாறிய கொரோனா மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாக பரவி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.