அமலாக்கத்துறை மத்திய அரசால் தவறாக நடத்தப்படுகிறது - கார்த்தி சிதம்பரம்!

அமலாக்கத்துறை மத்திய பாஜக அரசால் தவறாக நடத்தப்படுவது குறித்து மக்களுக்கு எடுத்துறைக்கவே டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் குழுமியுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை மத்திய அரசால் தவறாக நடத்தப்படுகிறது - கார்த்தி  சிதம்பரம்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை  சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸார் இடையேயான ஒற்றுமையை கட்சி தலைமைக்கும் நாட்டு மக்களுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் டெல்லியில் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் குழுமியுள்ளதாகவும், அமலாக்கத்துறை தொடுக்கும் அனைத்து வழக்குகளும் போலியானவையே என்றும் கூறினார். அமலாக்கத்துறையிடம் இருந்து அதிகபட்ச சம்மன்களை பெற்றுள்ளதாக இவ்விவகாரத்தில் தனக்கு அனுபவம் அதிகம் என்றார்.