சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.இதை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சி மேற்கொள்ளலாம். எனவே, அனைத்து மாநில போலீஸாரும் உஷார் நிலையில் இருக்கும்படி மத்திய உளவுத் துறை மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது. இதையடுத்து டெல்லி உள்பட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் உரிய சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

நாளை சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறவுள்ள செங்கோட்டை, இந்தியா கேட் போன்ற முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.