2000 கோடிக்கு அதிபதி... தெருநாய்களால் ஏற்பட்ட விபரீதம்!

பல ஆயிரம் கோடிக்கு அதிபதியான நபர், தெருவில் நாய்கள் துரத்திய பொழுது ஏற்பட்ட விபரீதத்தில் உயிரிழந்துள்ளார்.

பராக் தேசாய் (48), டீ பிராசசர்ஸ் மற்றும் பேக்கர்ஸ்-ன் செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்தார். இந்நிறுவனத்தின் வாக் பக்கிரி என்ற டீ தூள் ப்ராண்ட் மிகவும் பிரபலம் அடைந்த ஒன்றாகும். இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்டிரா, டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 2000 கோடி ஆகும்.

2000ரூ கோடிக்கு அதிபாதியான இவர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே நடந்து சென்றுகொண்டிருந்த பொழுது, அவரை தெரு நாய்கள் சில துரத்தியுள்ளன.

இந்த நாய்களிடம் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் வேகமாய் ஓடிய பராக் தேசாய், எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவர் கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மூலையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பராக் தேசாயின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.