நீட் விண்ணப்பம்... இன்றுடன் நிறைவு!!

நீட் விண்ணப்பம்... இன்றுடன் நிறைவு!!

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.  அதைப்போல் ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  அதன்படி 2023-24 ஆம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ் ஆங்கிலம் இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7ஆம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மார்ச் 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.  இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் neet.nta.nic. in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும், மேலும் கூடுதல் தகவல்களுக்கு nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:    கழக உறுப்பினர்களுக்கு நன்றி கடிதம் அனுப்பும் இபிஎஸ்...எதற்காக?!!