பிரசாத் கிஷோரால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியை தரமுடியும்: வீரப்ப மொய்லி...

பிரசாத் கிஷோரால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியை தரமுடியும் என அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.  

பிரசாத் கிஷோரால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியை தரமுடியும்: வீரப்ப மொய்லி...

கடந்த ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைக்குமாறு கட்சி தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். ஜி23 என அழைக்கப்படும் அந்த 23 பேரில் வீரப்ப மொய்லியும் ஒருவர். அதன் பின் அவர் சோனியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

 இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வீரப்ப மொய்லி, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தபடியே சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான் 'ஜி23' குழுவை சேர்ந்த எங்களில் சிலர் கடிதம் எழுதினோம். ஆனால், சோனியாவே அடிமட்ட அளவில் இருந்து சீர்திருத்தங்களை செய்ய முடிவு எடுத்தார். அவர் துடிப்பாக செயல்படுவதாக தெரிவித்தார்.

இதனால் என்னை போன்றவர்கள், ஜி23 குழுவில் இருந்து விலகினோம். இன்னும் அக்குழுவில் விடாப்பிடியாக இருக்கும் தலைவர்கள், காங்கிரசுக்கு எதிராக செயல்படுவதாகத்தான் அர்த்தம்.தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பல மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். அவர் கட்சிக்கு வெளியில் இருந்து சீர்திருத்தங்களை செய்வதற்கு பதிலாக, கட்சிக்குள் இருந்து செயல்பட வேண்டும் எனவும் மொய்லி வேண்டுகோள் விடுத்தார்.

 பிரசாந்த் கிஷோரை காங்கிரசில் சேர்ப்பது கட்சிக்கு நல்லது. அவர் காங்கிரசுக்கு எழுச்சியை ஏற்படுத்துவார். அவரை சேர்க்கக்கூடாது என, எதிர்க்கும் மூத்த தலைவர்கள், கட்சி சீர்திருத்தங்களுக்கு எதிராக செயல்படுவதாக அர்த்தம் என தெரிவித்தார்.