மும்பை பங்கு சந்தை இன்று மீண்டும் சரிவுடன் தொடக்கம்

மும்பை பங்கு சந்தை நேற்று ஒரே நாளில் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் இன்றும் சரிவுடனேயே தொடங்கியுள்ளது.

மும்பை பங்கு சந்தை இன்று மீண்டும் சரிவுடன் தொடக்கம்

வார வர்த்தக முதல் நாளாக நேற்று மும்பை பங்கு சந்தை ஆயிரத்து 500 புள்ளிகளுக்கு மேல் சரிவை கண்டது. ரிசர்வ வங்கி அதன் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்ததே அதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மும்பை பங்கு சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.

காலை 10 மணி நிலவரப்படி மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 40 புள்ளிகள் சரிந்து 52 ஆயிரத்து 806 என நிலைக் கொண்டு வர்த்தகமாகியுள்ளது. இதேபோல் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து 765 என நிலைக் கொண்டு வர்த்தகமாகியுள்ளது.