புதுக்கட்சி துவங்குகிறார் முன்னாள் முதல்வர்..? பா.ஜ.க, வுடன் கூட்டணி வைக்கவும் திட்டம்...

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் புதிய கட்சி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

புதுக்கட்சி துவங்குகிறார் முன்னாள் முதல்வர்..? பா.ஜ.க, வுடன் கூட்டணி வைக்கவும் திட்டம்...

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும், தற்போதைய அம்மாநில காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத் சிங் சித்துக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வந்தது. இதனால் அமரீந்தர் சிங் தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக இருந்தது. இந்நிலையில் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.