பீகாரில் துயரம்..! பாகமதி ஆற்றில் மூழ்கிய பள்ளிக் குழந்தைகள்...!

பீகார் மாநிலம் முசாபர்புர் அருகே பாகமதி ஆற்றில் 13 பள்ளிக் குழந்தைகள் மூழ்கினர்.

முசாபர்புர் அருகேயுள்ள  பேனியாபாத் பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் அனைத்து மாணவர்களும் மூழ்கினர்.

தகவலறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையின் மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவம் குறித்து பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள்  வழங்கப்படும் என்றும்  மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க   | தங்க கடத்தல் சோதனை; அப்பாவி பயணிகளை பல மணி நேரம் நிற்க வைத்த சுங்கத்துறை!