கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வேட்பு மனு தாக்கல்...!

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வேட்பு மனு தாக்கல்...!

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகாகான் சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த 13 ஆம் தேதி துவங்கியது. 20ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற உள்ள நிலையில் இதுவரை மூன்று பிரதான கட்சிகளும் முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியிடாத சூழலே தேர்தல் களத்தில் நிலவி வருகிறது. பல முக்கிய தலைவர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேட்பு மனு தாக்கல் செய்து வந்தாலும் இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் வேட்புமனு தாக்கல் சூடு பிடித்துள்ளது.  

இன்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது சொந்த தொகுதியான ஷிகாகான் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் இன்று காலை தனது தொகுதியில் பல கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு முதல்வர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.‌ முக்கிய தலைவர்கள் யாரும் உடன் இல்லாமல் முதல்வர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இன்று தற்காலிகமாக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இரண்டாவது முறை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர்  பாஜக முக்கிய தலைவர்களுடன் சேர்ந்து மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.