காஷ்மீர் ..பயங்கரவாதிகளால் 2 காவலர்கள் சுட்டுக்கொலை... பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை..!!

காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் ..பயங்கரவாதிகளால் 2 காவலர்கள் சுட்டுக்கொலை... பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை..!!

காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குல்சன் சவுக் பகுதியில் தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனை தடுக்க முற்பட்ட போது 2 காவலர்கள் பலத்த காயமடைந்தனர்.

இதனையடுத்து, அவர்களை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர்கள் இருவரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து கூடுதல் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்...