சதர் பண்டிகை விழா...பாகுபலி எனும் எருமைக்கு 3 கிலோ எடையிலான தங்க சங்கிலி அணிவிப்பு

ஹைத்ராபாத்தில் சதர் பண்டிகையொட்டி பாகுபலி எனும் எருமைக்கு 3 கிலோ எடையிலான தங்க சங்கிலி அணிவிக்கப்பட்டது.

சதர் பண்டிகை விழா...பாகுபலி எனும் எருமைக்கு 3 கிலோ எடையிலான தங்க சங்கிலி அணிவிப்பு

தெலங்கானா மாநிலம் ஹைத்ரபாத் சப்பல் பஜார் பகுதிகளில் வசித்து வரும் பெரும்பான்மையான யாதவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள் தீபாவளி பண்டிகைக்கு பிறகு மூன்று நாட்கள் சதர் என்னும் பண்டிகையை திருவிழாவாக கொண்டாடுவது வழக்கமாக கொண்டிருந்தனர். 

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாட்டினை அலங்கரித்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து சென்று நிறைவு செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஹரியானாவிலிருந்து பாகுபலி என்னும் எருமையை வரவழைத்து, அதற்கு 3 கிலோ எடையிலான தங்க சங்கிலி அணிவித்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது.