பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு ஊழியர் கைது.!

காரைக்கால் அருகே 15 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, அரசு ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு ஊழியர் கைது.!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால், தலத்தெருவை சேர்ந்தவர் அருண். இவர் திருபட்டினத்தில் உள்ள  அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு டி.ஆர் பட்டினம் பகுதிக்கு சென்ற இவர், அந்தபகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தந்தை திருபட்டினம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு ஊழியரான அருணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.