விமான விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய நடிகை ரோஜா...!!!

நடிகை ரோஜா பயணித்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென தொழில்நூட்ப கோளாறு ஏற்பட்டது.

விமான விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய நடிகை ரோஜா...!!!

ஆந்திர மாநில ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரோஜா விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கு தனியார் விமானம் மூலம் வந்துகொண்டிருந்தார். அவர் பயணித்த விமானம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் தரை இறங்க இறந்த நிலையில் மேகமூட்டம் காரணமாக தரையிறங்க இயலாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து சாதுர்யமாக செயல்பட்ட விமானி, விமானத்தை அவசரமாக, பெங்களூருவில் தரையிறக்கி உள்ளார். விமானியின் துரிதமான செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கிய அந்த விமானத்தில் இருந்து பயணிகளை வெளியே விடாமல் 4 மணிநேரம் கதவு அடைக்கப்பட்டு இருந்ததாகவும், என்ன பிரச்சினை என்பதை விமானிகள் தெரிவிக்கவில்லை என்றும் நடிகை ரோஜா கூறியுள்ளார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.