குடியரசுத் தலைவரை சந்திக்கும் முதலமைச்சர்...!

குடியரசுத் தலைவரை சந்திக்கும் முதலமைச்சர்...!

கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.

சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டு வரும் பன்னோக்கு அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் 5,884 ரேஷன் கடைகளுக்கு ISO தரச்சான்று - கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

திமுகவின் முக்கிய திட்டங்களாக பார்க்கப்படும் இவற்றுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் அழைத்து திறப்பு விழாவை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, டெல்லி புறப்பட்டு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவரை இன்று காலை 11.30 மணியளவில் சந்தித்து திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.