27 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை...விடுவிக்கக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த 14-ம் தேதி ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 27 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிக்க : வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி! - போஸ்டர் கொண்டாட்டம்

இந்நிலையில், மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும், படகுகளை விடுவிக்க கோரியும், ராமேஸ்வரம் தபால் நிலையம் முன்பாக, அனைத்து விசைப் படகு மீனவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட  விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.