தடுப்பு வேலியை லாவகமாக தாண்டி சென்ற யானை... வைரலாகும் வீடியோ

கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் யானை ஒன்று தடுப்பு வேலியை லாவகமாக தாண்டும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது 

தடுப்பு வேலியை லாவகமாக தாண்டி சென்ற  யானை... வைரலாகும் வீடியோ

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் தேசிய வன உயிரியல் பூங்கா அருகே யானை ஒன்று, இரும்பு வேலியை தாண்டி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. ஓம்கார் மலைதொடரில் உள்ள ரயில்வே பாதையில் பொதுமக்கள் செல்லாமல் ரயில்வே துறையினர், ரயில்வே கேட்டிற்கு அருகே தடுப்பு வேலி அமைத்துள்ளனர்.

இந்நிலையில் அந்த தடுப்பு வேலி அருகே வந்த யானை ஒன்று, வேலியை தாண்டி சென்றது. இந்த காட்சியை அங்கிருந்த ஊழியர்கள் வீடியோ எடுத்தனர். இந்த காட்சி வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது