மகளிர் உரிமைத்தொகை; ஆண்டுதோறும் தகுதி சரிபார்க்கப்படும்...!

ஒவ்வொரு ஆண்டின் காலாண்டு மற்றும் அரையாண்டு காலங்களில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் தகுதி உறுதிபடுத்தப்படும் என்று சிறப்பு திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் தகுதி உறுதிபடுத்தப்படும் என சிறப்பு திட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காலாண்டு முறையில் பொது விநியோகத் திட்ட தரவுகள், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்பட்ட தரவுகள், நில உடைமைத் தரவுகள் ஆகியவை சரிபார்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் அரையாண்டு சரிபார்ப்பில், தொழில்வரி செலுத்தப்பட்ட தரவுகள், மின்சாரப் பயன்பாட்டுத் தரவுகளும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் வருமான வரி செலுத்தப்பட்ட தரவுகளும், சொத்து வரி செலுத்தப்பட்ட தரவுகளும் சரிபார்க்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.