பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ. 20,000 ஊக்கத்தொகை..!!

பஞ்சாபில், பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் மாநில தலைவர் நவ்ஜோத் சித்து அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ. 20,000  ஊக்கத்தொகை..!!

பஞ்சாபில், பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் மாநில தலைவர் நவ்ஜோத் சித்து அறிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என பாஜகவும், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என காங்கிரஸும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தநிலையில் பஞ்சாபில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய நவ்ஜோத் சித்து,  உயர்கல்வி பயிலும் மாணவிகளின் வசதிக்கென டேப்லெட் வழங்க உள்ளதாக குறிப்பிட்டார்.

10ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் என பள்ளி படிப்பு முடிந்ததும் மாணவிகளுக்கு மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.