ஜுன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடியை தாண்டியது...

நாட்டின் கடந்த ஜுன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாய் தாண்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜுன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடியை தாண்டியது...

நாட்டின் ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக இருந்த நிலையில், ஜூலையில் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது. ஜூலை மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் தகவலை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டது.

மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி வசூலித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் முடிந்த நிலையில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு என்ற விவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சத்து 16ஆயிரத்து393 கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 இதில் மத்திய அரசு ஜிஎஸ்டி வருவாய் 22ஆயிரத்து197 கோடி ரூபாய் எனவும், மாநில ஜிஎஸ்டி வருவாய் 28ஆயிரத்து 541 கோடி ரூபாய் எனவும், சர்வதேச ஜிஎஸ்டி 57ஆயிரத்து 864 கோடி ரூபாய் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த 27 ஆயிரத்து 900 கோடி ரூபாயையும் சேர்த்து) எனவும், செஸ்  வருவாய் 7 ஆயிரத்து  790 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 92 ஆயிரத்து 849 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது.