அண்ணாமலை உண்ணாவிரதம் இருக்கட்டும் எனக்கு கவலையில்லை: கர்நாடக முதல்வர்  

மேகதாது விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றி எனக்கு கவலையில்லை என கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.  

அண்ணாமலை உண்ணாவிரதம் இருக்கட்டும் எனக்கு கவலையில்லை: கர்நாடக முதல்வர்   

கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்த போது, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் பெரும் மோதல் ஏற்பட்டு வந்தது. அணையை கட்டவிடமாட்டோம் என்று தமிழகத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, டெல்லி வரை சென்று கோரிக்கை வைத்துவிட்டு வந்தனர்.

 இதனிடையே கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய, கர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை பொறுப்பேற்றார். இதன்பிறகு தான் மீண்டும் மேகதாது அணை விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

 முதல்வராக பொறுப்பேற்ற பசுவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணை கட்டும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பிரதமரிடம் அனுமதி பெற்று அணை கட்டும் பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்திருந்ததார்.இதனைத்தொடர்ந்து 2 நாள் பயணமாக கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை டெல்லி சென்று, பிரதமர் மோடி, தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் அமைச்சர்களை சந்தித்து முதல்வராக தேர்ந்தெடுத்தற்கு நன்றி தெரிவித்தாகவும், மேகதாது அணை கட்ட கோரிக்கை வைத்தாகவும் தெரிவித்திருந்தார்.

 மேகதாது அணை விவகாரத்தில் ஆளும் பாஜக கர்நாடக அரசி கண்டித்து தஞ்சாவூரில் வரும் 5ஆம் தேதி உண்ணாவிரத போரட்டம் நடத்தவுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மேலும்  மேகதாது அணையை கட்ட ஒரு செங்கல்கூட வைக்க முடியாது என்றும் கர்நாடக முதல்வரின் பேச்சு தவறானது எனவும் கூறியிருந்தார்.

 இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பசுவராஜ் பொம்மை, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்றும் காவிரியில் கர்நாடகாவுக்கு உரிமையுள்ளது எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.இதனைத்தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலளித்த கர்நாடக முதலமைச்சர், மேகதாது விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றி எனக்கு கவலையில்லை. யாரவது உண்ணாவிரம் இருக்கட்டும் அல்லது உணவு உண்ணட்டும். எனக்கு அதுபற்றி கவலை இல்லை என்றும்மேகதாது பற்றி அண்ணாமலை பேசியதற்கு பதிலளிப்பது என்னுடைய வேலையும் அல்ல என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.