பாதுகாப்பு அமைச்சரவை குழுவுடன் மோடி ஆலோசனை...
ஆப்கன் நிலவரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி ஆட்சி நடத்தி வரும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சரவை குழுவினருடன் பிரதமர் ஆலோசனை மேந்கொண்டார். பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியா மேற்கத்திய எல்லைகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தாலிபான ஆட்சிக்கு சீனா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த அவசர ஆலோசனை கூட்டத்தின் போது ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக என தகவல்கள் வெளியாகியுள்ளன.