ஆளுங்கட்சி கொடிக்கம்பத்தை திருடிய மர்ம நபர்கள் ....மோப்ப நாய்கள் மூலம் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீஸ்

தெலுங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சி கொடிக்கம்பம் திருடப்பட்ட நிலையில் மோப்ப நாய்களை வரவழைத்து அந்த கொடிக்கம்பத்தை தேடும் பணிகளில்  போலீசார் ஈடுபட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுங்கட்சி கொடிக்கம்பத்தை திருடிய மர்ம நபர்கள் ....மோப்ப நாய்கள் மூலம் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீஸ்

தெலங்கானா மாநிலம் விகாரபாத் மாவட்டம் மல்லேகாணிக்கூடா என்னுமிடத்தில் தெலங்கானா ஆளுங்கட்சியான டி ஆர்எஸ் கட்சி கொடிக்கம்பத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அங்குள்ள டி.ஆர்.எஸ் கட்சியினர் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீகாராபாத் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொடிக்கம்பத்தை திருடிய மர்ம நபர்களை பிடிக்க முடியாத நிலையில், மோப்ப நாய்களை வரவழைத்து தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

போலீசாரின் இந்த செயல்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்பட்டுள்ளது. சாதாரண கொடிக்கம்பத்தை தேடுவதற்காக ஆளுங்கட்சியினர் மற்றும் போலீஸார் மோப்ப நாய்களை வரவழைத்து கொடிக்கம்பத்தை தேடியது அந்தப் பகுதியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.