பிரிவை தாங்காத மயில்...நெகிழ்ச்சியில் உறைந்த மக்கள்!!

உயிரிழந்த மயிலை எடுத்து சென்ற வனத்துறை அதிகாரிகளை பின் தொடர்ந்தவாறு அதன் ஜோடி மயில் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரிவை தாங்காத மயில்...நெகிழ்ச்சியில் உறைந்த மக்கள்!!

ராஜஸ்தானில் கடந்த நான்கு ஆண்டு காலமாக இந்த இரு மயில்களும் ஒன்றாக சுற்றி திரிந்த நிலையில் இருந்து வந்துள்ளனர்.இதில் ஒரு மயில் சமீபத்தில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

உயிரிழந்த மயிலை நோக்கி சென்ற அதிகாரிகள் அதனை தகனம் செய்வதற்காக எடுத்து செல்ல முற்பட்ட போது அதனின் ஜோடி மயில் அவர்களை பிந்தொடர்ந்து சென்ற காட்சிகளை அப்பகுதியினர் சிலர் வீடியோ காட்சிகள் எடுத்து பதிவு செய்து இணையத்தில் விட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து தன் ஜோடியை பிரிய மனமில்லாத அந்த மயிலானது அதனை புதைக்கப்பட்ட இடத்திலேயே நின்று கொண்டிருந்த காட்சிகள் பார்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

இந்த வீடியோ காட்சிகளை கண்டு பலரும் இணையத்தில் அவரவர் கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.மயில் இனங்கள் பொதுவாகவே அதன் ஜோடிகளை மாற்றி கொள்வது சாதாரண விஷியமாக இருக்கும்.இதற்கு மத்தியில் ஒரு இழப்பின் தாக்கமானது பறவைகளையும் தாக்கும் என்பது கண் முன்னே வந்து செல்லும் அளவிற்க்கு இந்த பதிவு சிறந்த உதாரணமாக உள்ளது.