பிரதமர் மோடியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திடீர் சந்திப்பு...

டெல்லியில் பிரதமர் மோடியை திடீரென சந்தித்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசியுள்ளார்.

பிரதமர் மோடியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திடீர் சந்திப்பு...

குடியரசு தலைவர் பதவிக்கு சரத்பவாரை களமிறக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், அந்த பதவிக்கு போட்டியிட சரத் பவாருக்கு திட்டம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தேசிய நலனுக்காக பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

மேலும் திங்கள் கிழமை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே, சமீபத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இரண்டு முறை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.