போராட்டக்காரர்களை குதிரைப்படை மூலம் விரட்டி அடித்த காவல்துறை!!

கனடா தலைநகர் ஒட்டாவாவில் குதிரைப்படைக் காவலர்கள் மூலம் போராட்டக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

போராட்டக்காரர்களை குதிரைப்படை மூலம் விரட்டி அடித்த காவல்துறை!!

நீண்ட நாட்களாக நீடித்து வந்த சரக்கு வாகன ஓட்டுனர்களின் கொரோனா தடுப்பூசி போராட்டத்தை, நீதிமன்ற உத்தரவையடுத்து கனடா அரசு ஒடுக்கி வருகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் போராட்டக்காரார்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தகராறில் சாலைகளை மறித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர். இதனிடையே ஒட்டாவாவில் மறியலில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் கூட்டத்திற்குள் குதிரைப்படை வீரர்கள் புகுந்ததால் அவர்கள் சிதறி ஓடினர்.