சபரிமலை கோவில் மகர விளக்கு பூஜை தரிசனம்.. ஆன்லைன் முன்பதிவு நிறைவு

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்து விட்டதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை கோவில்  மகர விளக்கு பூஜை தரிசனம்.. ஆன்லைன் முன்பதிவு நிறைவு

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்து விட்டதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்தாண்டுக்கான மண்டல மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, வருகிற 15 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. சாமி தரிசனத்திற்கு வருபவர்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்து 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டுமென அம்மாநில அரசு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் முன்பதிவு நிறைவடைந்து விட்டதாகவும், இதுவரை சாமி தரிசனத்திற்கு 12 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.