மக்களுக்கு விழிப்புணர்வு... சிறப்பு டூடுலை வெளியிட்டது கூகுள்.!!

மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வு... சிறப்பு டூடுலை வெளியிட்டது கூகுள்.!!

மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்துகள் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தொற்றில் இருந்து உலக மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முககவசம் அணிந்து கொள்ள வேண்டும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இன்னும் பல நாடுகளில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவதில்லை. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தியும், முககவசம் அணிய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் பிரபல கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.