அமைச்சர் பதவி வழங்க மறுப்பு: ஆத்திரத்தில் பாஜக அலுவலகத்தை சூறையாடிய ஜான் குமார் ஆதரவாளர்கள்...

புதுச்சேரி மாநில பாஜக அலுவலகத்தை எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமைச்சர் பதவி வழங்க மறுப்பு: ஆத்திரத்தில் பாஜக அலுவலகத்தை சூறையாடிய ஜான் குமார் ஆதரவாளர்கள்...

புதுச்சேரி காமராஜ் நகர் எம்.எல்.ஏவான ஜான் குமார், கடந்த ஆட்சியின் போது, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனிடையே பாஜக சார்பில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் புதுச்சேரி மாநில அமைச்சர்கள் பட்டியலில் ஜான் குமார் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் பரவியுள்ளன.

இதனால் ஆத்திரமடைந்த ஜான் குமார் ஆதரவாளர்கள் புதுச்சேரி மாநில பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆவேசம் அடைந்த அவர்கள் பாஜக அலுவலக பேனரை கிழித்தும் உள்ளே இருந்த பொருட்களை உடைத்தும் அலுவலகத்தை சூறையாடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.