ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்குமாறு இந்தியாவுக்கு தலிபான்கள் கோரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்குமாறு இந்தியாவுக்கு தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்குமாறு இந்தியாவுக்கு தலிபான்கள் கோரிக்கை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. இந்தநிலையில் அங்கு அசாதாரண சூழல் நிலவியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அந்நாட்டுடனான அனைத்து வணிக ரீதியிலான விமான சேவைகளையும் இந்தியா நிறுத்தியது.

ஆப்கானிஸ்தானில் மெல்ல இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து காபூல் விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுடனான வணிக ரீதியிலான விமான சேவையை மீண்டும் தொடங்க கோரி மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு தலிபான்கள் தலைமையிலான அரசு கடிதம் எழுதியுள்ளது.