ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்- பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி....

மகாராஷ்டிராவில் ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்ணை, அங்கிருந்த பயணிகள் காப்பாற்றியுள்ளனர். 

ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்- பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி....

வாசை ரோடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரெயிலில், அங்கிருந்த பெண் ஒருவர் ஏற முயன்றுள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்த பெண், நடைமேடைக்கும் ரெயிலுக்கும் இடையே சிக்கி கொண்டார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் பதறியபடி ரெயிலுக்கு இடையே சிக்கிக்கொண்ட பயணியை காப்பாற்ற ஓடி வந்தனர்.

பின்னர் ரயிலும் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்த பயணிகள் உடனடியாக , அந்த பெண்ணை நடைமேடைக்கு இழுத்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.

இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியது. இந்த பதைபதைக்கும் காட்சி தற்போது வெளியாகி காண்போரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.