தந்தையை விட அதிக வயதுடையவரை காதலித்து திருமணம் செய்த பெண்!
யாழில் பெண் ஒருவர் செய்த திருமண சம்பவத்தால் மனமுடைந்து போன பெற்றோர்கள்.
வெளிநாடொன்றிலிருந்து யாழில் பகுதிக்கு வந்த 56 வயதுடைய ஒருவர் வணிக வளாகம் ஒன்றை திறந்துள்ளார்.அதில் பணிபுரிந்து வந்துள்ளார் 23 வயதான யுவதி. இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துள்ளனர்.இதனை ஏற்றுக்கொள்ள முடியாத பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
யுவதியும் வர்த்தக நிலைய உரிமையாளரும் திருமணம் செய்து கொண்டது தொடர்ந்து யுவதியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.இதனை பற்றி விசாரிக்க இருவரையும் அழைத்து அறிவுரை கூறியுள்ளனர்.அதனை மறுத்த இந்த ஜோடிகள் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டாதாக கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து யுவதியின் தந்தைக்கு வயது 45 எனவும் அவரை விட வயதில் பெரியவரை மகள் திருமணம் செய்தது அவர்களை பெரிதும் துயர நிலைக்கு ஆழ்த்தப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.