மரத்தை திருமணம் செய்து 3 ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் பெண்மணி !!

மரத்தை திருமணம் செய்து கொண்டு மூன்று ஆண்டு காலமாக குடும்பம் நடத்தி வரும் பெண் திருமண உறவு நல்ல முறையில் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்

மரத்தை திருமணம் செய்து 3 ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் பெண்மணி !!

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் மெர்சிசைடில் உள்ள செப்ஃடனில் எல்டர் என்ற மரத்தினை 37 வயதான பெண்மணியான கேட் கன்னிங்ஹாம் என்பவர் கடந்த 2019 ல் திருமணம் செய்துள்ளார்.திருமணம் முடிந்த கையோடு அவரது பெயருடன் எல்டர் என்ற பெயரை இணைத்துக்கொண்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் அந்த பெண் வாரத்திற்கு ஐந்து முறையாவது அந்த மரத்தினை வந்து பார்த்து விட்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பாக்சிங் டே எனப்படும் தினத்தன்று மரத்தோடு நேரத்தை செலவழிப்பது மிகவும் பிடித்த ஒன்றாக கருதுகிறார்.அதனுடன் அந்த மரம் தன்னை மகிழ்ச்சியில் நிறைவு செய்வதாகவும் இந்த உறவு எனது வாழ்க்கையை சிறப்பாக மாற்றியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். தற்போது கிரிஸ்துமஸ் தினத்தன்று அவர் அந்த மரத்திற்கு டின்சல் மற்றும் பாபிள்களால் போன்றவற்றால் அதனை அலங்கரித்து அழகுபடுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து கன்னிங்ஹாம் ஒரு இயற்கை அலுவலராக இருந்து வருகிறார்.இவர் ரிம்தோஸ் பள்ளதாக்கு கண்ட்ரி பார்க் வழியாக புறவழிச்சாலையை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த மரத்தை திருமணம் செய்ததாக தெரிவித்தார்.பல ஆண்டுகளுக்கு முன்பு மரங்களை திருமணம் செய்த மெக்சிகன் பெண்களால் ஈர்க்கப்பட்டதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.