இந்தியா வந்துள்ள சவுதி அமைச்சருடன் ஆப்கன் பற்றி மத்திய அமைச்சர் பேச்சு.....

சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லிக்கு வந்தார். பின்னர் அவர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்தியா வந்துள்ள சவுதி அமைச்சருடன் ஆப்கன் பற்றி மத்திய அமைச்சர் பேச்சு.....

சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லிக்கு வந்தார். அவரது பயணத்தை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டர் மூலம் வரவேற்றார். பின்னர் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசினர். ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கியமாக விவாதித்தனர்.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், அந்நாட்டின் வளர்ச்சி குறித்து உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் சவுதி வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் அவர் இன்று  பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.