100 % கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் கிராமம்..!

100 % கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் கிராமம்..!

புதுச்சேரியில் 100 % கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் கிராமமாக புதுக்குப்பம் விளங்குகிறது

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்த  பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பல்வேறு தரப்பு மக்கள் தயக்கும் காட்டி வரும் நிலையில் புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட புதுக்குப்பம் கிராமத்தில், புதுச்சேரி அரசு முகாம்கள் அமைக்கப்பட்டு 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.  

இந்த கிராமத்தில் வசிக்கும்  45வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், 100 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமம் என்ற பெயரை புதுக்குப்பம் கிராமம் பெற்று மற்ற கிராமங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.