அத்தை மகள்கள் 2 பேரை ஒரே நேரத்தில் திருமணம் செய்த நபர்...
தெலுங்கானாவில் அத்தை மகள்கள் இரண்டு பேரை முறை மாமன் ஒரே நேரத்தில் காதலித்து கரம் பிடித்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் உட்னூர் அடுத்த கான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன். இவர் ஒரே நேரத்தில் அத்தை மகள்களான சுரேகா மற்றும் உஷாராணியை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் தொடர்பு கொண்டு காதல் வலையை வீசியுள்ளார். இதில் 2 பேரும் சிக்கியுள்ளனர். இதையடுத்து இரண்டு பேரையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலித்து வந்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இது குறித்த தகவல் 3 குடும்பத்துக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களுடைய முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது. மணமகள் கிடைக்காமல் மணமகன்கள் தவித்து வரும் இந்த காலகட்டத்தில், ஒரே மடையில் இரண்டு பெண்களை கரம் பிடித்த சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.