பாஜக நிர்வாகிகளுக்கு பொருட்கள் விற்பனை செய்ய தடை... அதிர வைத்த போஸ்டர்

பாஜக நிர்வாகிகளுக்கு பொருட்கள் விற்பனை செய்ய தடை... அதிர வைத்த போஸ்டர்

மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள  கிராமம் ஒன்றில் மகிஷ்டா என்ற பகுதியில் "மக்கள் பாஜக நிர்வாகிகளை புறக்கணிக்க வேண்டும். டீக்கடைகளில் டீ கூட கொடுக்கக் கூடாது.  கடைகளில் அவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய கூடாது. இவற்றை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும்'' என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இங்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை உள்ளூர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியதாக கூறப்படுகிறது. மேலும்  இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், கேஷ்பூரில் அந்த குறிப்பிட்ட பகுதியில் பாஜக அதிக வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்படி பாஜக நிர்வாகிகளுக்கு எதிரான ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அதிர்ச்சி அளிப்பதாகவும், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டர் பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.