மாநில மல்யுத்தப் போட்டி; சேலத்தில் தொடங்கியது!

மாநில மல்யுத்தப் போட்டி; சேலத்தில் தொடங்கியது!

சேலம்: சேலத்தில் மாநில அளவிலான மல்யுத்த போட்டியை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திர சேகரன் தொடங்கிவைத்தார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் சதுரங்காடியில் தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் மற்றும் சேலம் மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
 
இதில் சேலம் ,ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களை சேர்ந்த 300 - கும் மேற்பட்ட வீரர்,  வீராங்கனைகள் பங்கேற்றனர்.  

எடை அளவை கொண்டு ஆண்களுக்கு 20 பிரிவுகள், பெண்களுக்கு 10 பிரிவுகள் என மொத்தம் 30 பிரிவுகளாக போட்டி நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற போட்டியை அதிமுக பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் துவக்கிவைத்தார்.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு மோட்டார் சைக்கிள், தங்கநாணயம், உள்ளிட்ட பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. 

முன்னதாக போட்டியில் பங்கேற்க வந்த வீரர்கள் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்று மைதானத்தை வந்தடைந்தனர்.

இதையும் படிக்க: இன்னைக்கு ஒரு புடி; எல்லாரும் வாங்க!