சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர்: பிவி சிந்து, பிரனோய் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.. ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி!!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் பிவி சிந்து, பிரனோய் ஆகியோர் முன்னேறியுள்ளனர். மற்றொரு இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர்: பிவி சிந்து, பிரனோய் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.. ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி!!

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் இத்தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, தாய்லாந்தின் சுபநிதா கேட்டோங்கை 21-18, 15-21, 21-19 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரனோய், இந்தோனேஷியாவின் சினிசுகா கின்டிங்கை 21-19, 19-21, 21-18 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.  

மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், இந்தோனேஷிய வீரர் கிறிஸ்டியனிடம் 21-18, 7-21, 13-21 என்ற புள்ளிகணக்கில் தோல்வியை தழுவி ஏமாற்றம் அளித்தார்.