காதல் தோல்வி...விரக்தியில் விஷம் குடித்து வீடியோ வெளியிட்ட காதலி.!

காதல் தோல்வி...விரக்தியில் விஷம் குடித்து வீடியோ வெளியிட்ட காதலி.!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த பெரியமுத்து என்பவரது மகள் செல்வமணி. 25 வயதான இவர், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆலங்குளத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையில் இவரும் அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சதீஷ் என்பவரும் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே, அதாவது சுமார் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.

செல்போனில் தங்கள் காதலை வளர்த்து வந்த இருவரும் கடந்த 6 மாதங்களாக கணவன் மனைவி போல் தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர் . ஒருகட்டத்தில் இவர்கள் இருவரின் தனிமை சந்திப்பை நேரில் பார்த்த செல்வமணியின் உறவினர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

அதனைதொடர்ந்து இருவரின் காதல் விஷயம் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு தெரிய வந்தது. மேலும் இது சம்பந்தமாக ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் காதலி செல்வமணி தரப்பினை சேர்ந்தவர்கள் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

புகாரின்பேரில் காவல்துறையினர் காதலன் சதிஷீடன் விசாரணை செய்துள்ளனர். அப்போது காதலன் தனக்கு செல்வணி யார் என்றே தெரியாது என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காதலி செல்வமணி, காதலன் சதீஸ் தன்னுடன் பழகியதற்காக ஆதாரங்களான புகைப்படங்கள் மற்றும் மெசேஜ், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை மகளிர் காவல்நிலைய போலீசாரிம் காண்பித்துள்ளார். 

அப்போது காதலி செல்வமணியை கண்டித்த போலீசார்,  சதிஷ் மீது புகார் அளிக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும், இல்லையென்றால் 2 தினங்களுக்குள் ஊர் பெரியவர்களிடம் பேசி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி மகளிர் போலீசார் செல்வமணியை அனுப்பி வைத்தனர். காவல் நிலையம் சென்று விட்டு வீடு திரும்பிய செல்வமணி காரைவிட்டு இறங்கி நேராக சதீஷின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு இருந்த சதீஷின் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து செல்வமணியை கடுமையாக தாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளனர். ஆனால் செல்வமணி சதீஷ் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா செய்தார். இதனால் ஊரிலுள்ள அக்கம்பக்கத்தினர் கடையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்தி அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று பாதிக்கப்பட்ட தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என வீடியோவில் பேசியவாறு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் காதலி செல்வமணி. இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.