ஒரே நாளில் தீர்க்கப்பட்ட 421 கோடி வழக்குகள்....!!

ஒரே நாளில் தீர்க்கப்பட்ட 421 கோடி வழக்குகள்....!!

தமிழகம் முழுவதும் இன்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 421  கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 80 ஆயிரத்து 655 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் இன்று தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு அமர்வுகளும், மதுரைக் கிளையில் மூன்று அமர்வுகளும், மாவட்டங்கள் மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் 434 அமர்வுகளும், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் சார்பில் ஒரு அமர்வும், 421 கோடியே 70 லட்சத்து 99 ஆயிரத்து 986 ரூபாய் மதிப்பிலான, 80 ஆயிரத்து 655 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

இதில், 102 கோடியே 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான  ஆயிரத்து 912 விபத்து இழப்பீட்டு வழக்குகள், 130 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,489 செக் மோசடி வழக்குகள் உள்ளிட்ட வழக்குக்ள் அடங்கும் என தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசீர் அஹமது அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க:   சென்ட்ரலில் வைக்கப்பட்ட ராட்சத மின்விசிறி...!!