‘யார பாத்து ஜோடியோட வர சொன்ன?' - போதை ஆசாமிகளால் நடந்த தகராறு

ஜோடியாக இருந்தால் தான் பார்ட்டிக்கு வர முடியும் என விரட்டியதால், கோபத்தில் இருந்து போதை ஆசாமிகள், பெரும் தகராறில் ஈடுபட்டனர். இந்த சண்டையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘யார பாத்து ஜோடியோட வர சொன்ன?' - போதை ஆசாமிகளால் நடந்த தகராறு

கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஸ்டார் ஓட் டல் முன் 4 பேர் உயர்-ரக காரில் சென்று கொண்டிருந்தனர்காரை நிறுத்தி அதில் இருந்து இறங்கி 4 பேர் போதையில் தள்ளாடியபடி நேற்றிரவு ஓட்டலுக்கு செல்ல முயன்றனர்அப்போது ஓட்டல் முன் இருந்த செக்யூரிட்டி விவரங்களை கேட்டார். அப்போது அவர்கள் டிஜே பார்ட்டியில் பங்கேற்க செல்வதாக கூறினர்.

மேலும் படிக்க | முன்விரோதத்தால் வந்த வினை...! பசுக்களை காயப்படுத்தி பழிதீர்த்துக்கொண்ட இளைஞர்...!

அப்போது அவர் ஜோடியாக இருந்தால் பார்ட்டிக்கு செல்ல முடியும். உங்களுக்கு அனுமதி கிடையாது எனக்கூறினார்கோபமடைந்த அவர்கள் தகராறு செய்தனர். இதை பார்த்த ஓட்டல் நிர்வாகத்தை சார்ந்த பவுன்சர்கள் அங்கே குவிந்தனர். தகராறு செய்த 4 பேரையும் விரட்டினர்.

மேலும் படிக்க | ராணுவ வீரர் மனைவியிடம் தாலிச்சங்கிலி பறிப்பு : 4 மாதங்களுக்கு பிறகு பிடிபட்ட நபர் !!

இந்நிலையில் காருக்கு சென்ற 4 பேரும் கத்தியுடன் மீண்டும் ஓட்டலில் நுழைய முயன்றனர், அவர்களை பவுன்சிலர்கள் கட்டையுடன் விரட்ட முயன்றனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதுஇரு தரப்பினரும் ரோட்டின் முன் நின்று தகராறில் ஈடுபட்டனர். இதை சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டனர்.

மேலும் படிக்க | சகோதரர்களுக்கு இடையே சொத்துத் தகராறு : இடையில் வந்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம் !!

தகவல் அறிந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். ஓட்டல் நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட் டதுகாரில் வந்தவர்கள் மீது ஓட்டல் நிர்வாகம் புகார் தர முன் வரவில்லை. போலீசார் காரில் வந்தவர்-கள் போதையில் இருந்த தால், விவரங்களை பெற்று அனுப்பி வைத்தனர்இவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.