மின்கசிவு காரணமாக வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது...! திருக்குவளையில் பரபரப்பு..!

மின்கசிவு காரணமாக வைக்கோல் போர்  தீப்பற்றி எரிந்தது...!   திருக்குவளையில் பரபரப்பு..!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுப்ரமணியன் என்பவரது வீட்டு கொல்லையிலுள்ள வைக்கோல் போர்  திடீரென தீப்பிடித்து எறிய துவங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீரை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த அகரவெளி என்ற ஊரில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவரது வீட்டில் இருந்த வைக்கோல் போரில் தீடீரென தீப்பிடித்து எறிய துவங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் தீ மளமளவென பரவி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது. 

தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் நீரை பீச்சு அடித்து தீயை அணைக்க முற்பட்டனர். எனினும், காற்றின் வேகம் காரணமாக தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மின் கம்பியில் அந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் உரசியதில் ஏற்பட்ட தீ வைக்கோல்  போரில் பற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உரிய நேரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தீயை விரைந்து அணைத்ததால்  பெரும் அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. 

இதையும் படிக்க   } அரியலூரில் புத்தகத் திருவிழா இன்று முதல் ஆரம்பம்....!

தொடர்ந்து மின் கசிவு ஏற்பட்ட இடத்தில் திருக்குவளைத் துணை மின் நிலைய பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருக்குவளை அருகே மின் கசிவு காரணமாக வைக்கோல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க   } கடும் கோடை மழையால்...... வாழை மரங்கள் சேதம்....கண்ணீரால் கோரிக்கை வைக்கும் விவசாயி...!