மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்...தயாநிதி மாறன் ..!

கொரோனா மூன்றாம் அலையை தடுப்பதற்கு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்...தயாநிதி மாறன் ..!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கழக நிர்வாகிகள் 300 நபர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது என்றும் கடந்த ஏழு மாதங்களில் ஓங்கியிருந்த இரண்டாவது அலையை முதலமைச்சர் கட்டுக்குள் கொண்டு வந்தார் என்றார்.

தற்போது ஒமிக்ரான் வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை எச்சரிக்கையுடன் பின்பற்ற வேண்டும் என்றும் ,  மூன்றாவது நிலையை கட்டுக்குள் கொண்டு வர அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கூறிய அவர்,

பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸை தடுக்க முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் இரண்டு தவணை தடுப்பூசியையும் உடனடியாக செலுத்த கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் நேற்று முதல் 15 -18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர்  துவக்கி வைத்துள்ளார் .எனவே அந்த வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் உடனடியாக தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.