அண்ணாமலை பாத யாத்திரை; இபிஎஸ்-க்கு அழைப்பு

அண்ணாமலை பாத யாத்திரை; இபிஎஸ்-க்கு அழைப்பு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை தொடக்க விழா கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

234 தொகுதிகளிலும் அண்ணாமலை 100 நாட்கள் பாதயாத்திரை செல்ல உள்ளார்.

இந்த பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் வரும் 28-ந் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளதாகவும், நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அண்ணாமலையின் இந்த பாத யாத்திரை தொடக்க விழா கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டடுள்ளது.

இதையும் படிக்க   | தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!