தமிழகத்தில் கொரோனோ நிலவரம் என்ன... சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு...

தமிழகத்தில் தற்போது எட்டாயிரத்து 337 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனோ நிலவரம் என்ன... சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நேற்று 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 25 ஆயிரத்து 467 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது எட்டாயிரத்து 337 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 772 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 80 ஆயிரத்து 667 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து,  வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 463 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக இருந்த நிலையில் நேற்று 107 ஆக அதிகரித்துள்ளது.