சி.பி.ஐ.(எம்). கட்சி அலுவலகம் மீது பாட்டில்கள் வீசியதால் பரபரப்பு...!

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மர்ம நபர்கள் பாட்டில்கள் வீசிச் சென்றதால் பரபரப்பு  ஏற்பட்டது. 

இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அலுவலக வளாகத்திற்குள் ஆறுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் மற்றும் கற்களை வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதையும் படிக்க : "குலக்கல்வி முறையை புகுத்த முயற்சிக்கிறது பாஜக" - கி. வீரமணி

தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த இந்திய  கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.