ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாட்டு தொழில் முதலீட்டு கழகம் சார்பாக விளக்க கூட்டம்...!
ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாட்டு தொழில் முதலீட்டு கழகம் (TIIC) சார்பாக கடன் உதவி குறித்து விளக்க கூட்டம்.
ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாட்டு தொழில் முதலீட்டு கழகம் (TIIC) சார்பில் தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் தொடங்க கடன் உதவி குறித்த விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டிக் நிறுவன முதன்மை மேலாண் இயக்குநர் அன்ஸ்ராஜ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். டிக் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வரும் கடன் திட்டங்களை பற்றியும் விளக்கினார்.
அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், வாழ்த்துரை வழங்கினார். பின்னர் கூட்டத்தில் தொழில் தொடங்க, கடன் உதவி பெற்ற ஆற்காடு பவளக்கொடி, சரவணன் மற்றும் தொழில் நிறுவனத்தினர் தங்கள் அனுபவங்கள்,TIIC நிறுவனம் அளித்து வரும் ஆதரவுகள் குறித்து எடுத்து பேசினர். இந்த நிகழ்வில் பெண் நிறுவன மேலாளர்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.