பல கோடி சொத்து வைத்துள்ள 94 வயது மூதாட்டியை வீட்டை விட்டு துரத்திய பிள்ளைகள்!!..

பல கோடி சொத்துக்கு சொந்தமான 94 வயது மூதாட்டியை பேணாமல் பிச்சை எடுக்க வைத்த 8 பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

பல கோடி சொத்து வைத்துள்ள  94 வயது மூதாட்டியை வீட்டை விட்டு துரத்திய பிள்ளைகள்!!..

மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த 94 வயதான அலமேலு என்பவருக்கு  5 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். பல கோடி மதிப்புள்ள சொத்துகளும், வீடுகளும், கடைகளும்  இவருக்கு உள்ள நிலையில்,. கடந்த 2010-ம் ஆண்டு மூதாட்டியின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழக்கவே சில சொத்துகளை மட்டும் விற்று அதனை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மூதாட்டியை பராமரிக்க மகன்களோ, மகள்களோ முன்வராததால் அவர் மீஞ்சூரில் உள்ள கோயிலில் பிச்சை எடுத்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் மூதாட்டியிடம் சொத்தை கேட்டு அவரது கையை உடைத்து மூத்த மகன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக   பாதிக்கப்பட்ட மூதாட்டி  காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், வேதனை அடைந்து இன்று மாவட்ட ஆட்சியரிடமே  புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக மூதாட்டி அலமேலு தெரிவித்தார்.