2 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு! தமிழக மக்கள் பீதி!!

தமிழகத்தில் புதிதாக 1,850 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு! தமிழக மக்கள் பீதி!!

தமிழகத்தில் புதிதாக 1,850 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்டு வந்த கொரோனா பாதிப்பு, சற்று குறைந்துள்ளது. இது தொடர்பாக  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு புதிதாக ஆயிரத்து 850 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அரசு மருத்துவமனைகளில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு இதுவரை மொத்தமாக 34 ஆயிரத்து 547 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிப்பில் இருந்து புதிதாக ஆயிரத்து 911 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 370ஆக உள்ளது. சென்னையில் புதிதாக 205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் அதிகபட்சமாக 217 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.